காவிரி விவகாரம் - பதிலளிக்காமல் சென்ற செல்லூர் ராஜூ

Webdunia
செவ்வாய், 15 மே 2018 (08:55 IST)
காவிரி விவகாரம் குறித்த கேள்விக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ பதிலளிக்காமல் சென்றுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் ஒரு முடிவு ஏற்படும் என காத்திருந்த நிலையில் மத்திய அரசு செயல் வரைவு திட்டத்தை தாக்கல் செய்தவுடன் இந்த வழக்கு வரும் 16ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. வரைவு திட்டம் குறித்து அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
 
இந்நிலையில் காவிரி விவகாரம் குறித்து அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
 
இதற்கு பதிலளிக்காத செல்லூர் ராஜூ ஏற்கனவே என்னை ரஜினி விஷயத்தில் மாட்டி விட்டீர்கள். உங்கள் கேள்விக்கு பதிலளிக்க போவதில்லை என கூறியபடி சென்றுவிட்டார். பேச வேண்டிய விஷயத்திற்கு பேசாமல், ஒன்றும் இல்லாத விஷயத்திற்கு மெனக்கெட்டு பேசுவதே ஆளும் கட்சியினரின் செயல் என பலர் விமர்சனம் செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நவம்பர் 27-ல் வங்கக் கடலில் மேலும் ஒரு தாழ்வு மண்டலம்! இந்திய வானிலை ஆய்வு மையம்

சீமான்தான் நம்பர் ஒன்!.. டிஜிட்டல் சர்வே மூலம் கிடைத்த ரிசல்ட்!..

வாக்காளர் பட்டியல் SIR படிவத்தை நிரப்ப ஏஐ தொழில்நுட்பம்: புதிய முயற்சி!

40 ஆண்டு அரசியல்.. 10 முறை முதல்வர்.. நிதிஷ்குமாரின் சொத்து மதிப்பு ரூ.1.64 கோடி, 13 பசுக்கள் தானா?

உலகிலேயே கஷ்டமில்லாத பணி கவர்னர் பணி.. கனிமொழி எம்பி கிண்டல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments