Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நூலிழையில் உயிர்தப்பிய அமைச்சர் செல்லூர் ராஜூ: பரபரப்பு தகவல்

Webdunia
ஞாயிறு, 8 மார்ச் 2020 (15:14 IST)
நூலிழையில் உயிர்தப்பிய அமைச்சர் செல்லூர் ராஜூ
மதுரையில் நடந்த அரசு விழா ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் செல்லூர் ராஜூ நூலிழையில் உயிர் தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது
 
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மதுரை நகர் முழுவதும் ஆங்காங்கே அழகுபடுத்தபட்டு வரும் நிலையில் மதுரை செல்லூரில் ரவுண்டானா ஒன்று அமைக்கப்பட்டது. அதன் திறப்பு விழாவில் இன்று அமைச்சர் செல்லூர் ராஜு அவர்கள் கலந்து கொண்டார் 
 
இந்த விழாவில் கலந்து கொண்டு அவர் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென ரவுண்டானா சரிந்து விழுந்தது. இதனால் அதில் வைக்கப்பட்டிருந்த கபடி வீரர்களின் சிலைகளும் கீழே விழுந்தன. இதனால் இந்த விழாவில் பேசிக்கொண்டிருந்த அமைச்சர் செல்லூர் ராஜூ உள்பட அதிமுகவினர் பலர் கீழே விழுந்தனர் 
 
இருப்பினும் அவர்களுக்கு எந்தவித ஆபத்தும் இல்லாமல் நூலிழையில் உயிர் தப்பினார்கள். இந்த சம்பவத்தால் மதுரை செல்லூர் அருகே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட ரவுண்டானா திறப்புவிழாவின்போதே இடிந்தது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்சங் நிறுவனத்தின் புதிய கியூ சீரிஸ் சவுண்ட்பார்கள் அறிமுகம்: AI தொழில்நுட்பத்துடன் அசத்தல்!

இந்தியாவில் 100 ஹெக்டேர் பரப்பளவில் தங்கப்புதையல் கண்டுபிடிப்பு! பல லட்சம் டன்கள் என தகவல்..!

டி.சி.எஸ். இன்ப அதிர்ச்சி.. 80% ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு என அறிவிப்பு..!

ராகுல் காந்தியின் தேர்தல் மோசடி குற்றச்சாட்டு.. தலைமை தேர்தல் அதிகாரி முக்கிய கடிதம்..!

கமல்ஹாசன் - மோடி திடீர் சந்திப்பு.. முக்கிய கோரிக்கையை வலியுறுத்தினாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments