Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கனிமொழி vs உதயநிதி: கொளுத்தி போட்ட செல்லூர் ராஜு

Webdunia
சனி, 22 டிசம்பர் 2018 (19:36 IST)
ஏற்கனவே, கனிமொழி தான் கட்சியில் இருந்து ஒதுக்கப்படுவதாகவும், முன்னுரிமை அளிக்கப்படுவதில்லை எனவும் ஆதங்கப்பட்டு வரும் நிலையில் செல்லூர் ராஜூ புது செய்தியை உருவாக்கியுள்ளார். 
 
ஆம், அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த போது, ஸ்டாலின் போகிற போக்கை பார்த்தால் கூடிய சீக்கிரம் தூக்கமில்லாமல் மன உளைச்சலில் தவிக்க போகிறார் என்பது மட்டும் தெரிகிறது.
 
உதயநிதியை தனது வாரிசாக ஸ்டாலின் உருவாக்கிவிட்டார். ஆனால் கனிமொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. அதிமுகவை அழிக்க ஒரு ஸ்டாலின் இல்லை... 100 ஸ்டாலின்கள் வந்தாலும் முடியாது. 
 
அவ்வளவு ஏன் அவர் மகன் உதயநிதி ஸ்டாலினும், அவர் பேரனும் வந்தால் கூட அதிமுகவை அழிக்க முடியாது. குடும்ப அரசியலை ஊக்குவிக்கும் திமுகவை மக்கள் என்னாலும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என தெரிவித்துள்ளார். 
 
கனிமொழியை ஸ்டாலின் பின்னுக்கு தள்ளி இருக்கிறாரோ இல்லையோ, உதயநிதியை முன்னிறுத்தப்பட்டு வருகிறார் என்பது அனைவரும் அறிந்த உண்மையே. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை முதல்வராகும் உதயநிதி… சீனியர் அமைச்சர்களின் இலாக்கா மாற்றம்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அடுத்த கட்டுரையில்
Show comments