Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எம்.ஜி.ஆர் மட்டும் அண்ணா பேர கட்சிக்கு வைக்கலனா? - செல்லூர் ராஜூ சர்ச்சை கருத்து

Webdunia
செவ்வாய், 18 செப்டம்பர் 2018 (12:00 IST)
அறிஞர் அண்ணா குறித்து அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 
அறிஞர் அண்ணாவை தனது மானசீகமான குருவாகவே, மறைந்த திமுக தலைவர் கருணாநிதியும், எம்.ஜி.ஆரும் பார்த்தனர். அதன் விளைவாக, எம்.ஜி.ஆர், தான் தொடங்கிய கட்சிக்கு அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என பெயர் வைத்தார். தான் நடிக்கும் திரைப்படங்களில் இடம் பெறும் பாடல் காட்சியிலும் அவர் அண்ணா என்ற வார்த்தையை தொடர்ந்து உச்சரித்து வந்தார்.
 
அவருக்கு பின் அதிமுகவை கையில் எடுத்த ஜெயலலிதாவும், விழாக்களில் பேசும்போது கூட ‘வாழ்க அண்ணா நாமம்’ என்று கூறியே தனது பேச்சை முடிப்பார். 
 
இந்நிலையில், நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ “எம்.ஜி.ஆர் மட்டும் அண்ணாவின் பெயரை தனது கட்சிக்கு வைத்திருக்காவிட்டால் அண்ணா என்றொருவர் வாழ்ந்தது யாருக்கும் தெரிந்திருக்காது” எனப் பேசினார்.
 
இது சமூகவலைத்தளங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பலரும் செல்லூர் ராஜூவுக்கு எதிராக கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments