Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தலுக்கு பின் கமல்ஹாசனுக்கு மன உளைச்சல் ஏற்படும்: செல்லூர் ராஜூ

Webdunia
வியாழன், 21 பிப்ரவரி 2019 (20:27 IST)
நாடாளுமன்ற தேர்தலில் கமல்ஹாசன் கட்சி தனித்து 40 தொகுதிகளிலும் போட்டியிட்டால் தேர்தலுக்கு பின் கமல்ஹாசனுக்கு மன உளைச்சல் ஏற்படும் என தமிழக அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.
 
கமல்ஹாசன் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட போவதாக அறிவித்துள்ளது குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த கமல்ஹாசன், 'இன்றைய நிலையில் தனித்து போட்டியிடுவது என்பது புத்திசாலித்தனமான விஷயம் இல்லை. கமல்ஹாசனுக்கு யாரோ தவறான அறிவுரையை கூறியுள்ளார். 
 
எதையும் ஆராய்ந்து செய்யக்கூடிய திறமை படைத்த கமல்ஹாசன் இந்த முடிவை எடுத்திருப்பது தவறு. அவர் ஒரு சிறந்த தமிழ் நடிகர். அனைத்து திறமையையும் கொண்டவர். யாரோ தவறான வழிகாட்டுதலின்பேரில் கட்சி ஆரம்பித்துவிட்டு தற்போது மீண்டும் தவறான வழிகாட்டுதலால் தேர்தலில் தனித்து போட்டியிடும் முடிவை எடுத்துள்ளார். இந்த முடிவு அவருடைய நல விரும்பிகள் ஏற்று கொள்ள மாட்டார்கள் என்று கூறியுள்ளார். 
 
கடந்த சில மாதங்களாக கமல்ஹாசனை மாறி மாறி அதிமுக அமைச்சர்கள் விமர்சனம் செய்து வந்த நிலையில் திடீரென அறிவுரை கூறியிருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு தொடர்ந்து உயர்வு.. இன்றைய நிலவரம் என்ன?

இந்தியாவில் ஆன்லைன் கேமிங் துறை ரூ.78,000 கோடி பிசினஸ் பெறும்.. சர்வே தகவல்..!

அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்: டாஸ்மாக் மனுதாக்கல்..!

4 நாட்கள் அடைத்து வைத்து 7 சிறுவர்கள் பாலியல் வன்கொடுமை.. 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

ரூ.38 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கடத்திய இளம்பெண்.. பெங்களூரு விமான நிலையத்தில் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments