Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாதியில எழுந்து போனா, ரத்தம் கக்கி சாவீங்க!’: செல்லூர் ராஜூ போட்ட மந்திரம்..!

Mahendran
புதன், 27 மார்ச் 2024 (19:09 IST)
நான் பேசும் போது யாராவது எழுந்து சென்றால் அவர்கள் ரத்தம் கக்கி சாவார்கள் என்று காமெடியாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிவிட்ட நிலையில் மதுரையில் இன்று செல்லூர் ராஜு தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேச வந்த உடனே நான் பேசிக் கொண்டிருக்கும் போது தயவு செய்து யாரும் எழுந்து செல்லாதீர்கள், அவ்வாறு எழுந்து சென்றால் ரத்த கக்கி சாவீர்கள் என்று சிரித்துக்கொண்டே காமெடியாக சொன்னார்.

நான் பேசுவதற்கு முன் எழுந்து சென்றால் பரவாயில்லை, ஆனால் நான் பேசும்போது யாரும் எழுந்து செல்லக்கூடாது, இப்பொழுதுதான் நான் ஒரு மந்திரவாதியை சந்தித்து மந்திரம் போட்டு வந்துள்ளேன், அந்த மந்திரவாதியிடம் நான் பேசும்போது யாராவது எழுந்து சென்றாலும் அவர்கள் ரத்தம் கக்கி சாகும் படி செய்து விடுங்கள் என்று கூறிவிட்டு தான் வந்திருக்கிறேன் என்று அவர் சிறிது கொண்டே காமெடியாக கூறினார்.

அதன் பிறகு அவர் திமுக அரசையும் பாஜகவையும் கடுமையாக விமர்சனம் செய்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments