Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாமகவால் தான் அதிமுக 36 தொகுதிகளில் வென்றது: ஈபிஎஸ்-க்கு அன்புமணி பதிலடி

Mahendran
புதன், 27 மார்ச் 2024 (19:04 IST)
அதிமுக ஆதரவு காரணமாகத்தான் பாட்டாளி மக்கள் கட்சி நான்கு தொகுதிகளை வென்றது என்று எடப்பாடி பழனிச்சாமி சமீபத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் கூறிய போது அதற்கு பதிலடியாக பாமக தலைவர் அன்புமணி. பாமகவால்தான் அதிமுக 36 தொகுதிகளில் வென்றது என்று கூறியுள்ளார்.

10. 5 சதவீத இட ஒதுக்கீடு காரணமாக தான் அதிமுக 66 தொகுதிகளை வென்றது என்றும் அதில் 36 தொகுதிகள் பாமா  பங்களிப்பு இல்லை என்றால் வெற்றி பெற்றிருக்க முடியாது என்றும் தெரிவித்தார்

அதிமுக ஆதரவால் நாங்கள் நான்கு தொகுதிகளை வென்றோம் என்பதை ஒப்புக் கொள்கிறோம், ஆனால் அதே நேரத்தில் பாமக இல்லை எனில் அதிமுக 36 தொகுதிகளில் வெற்றி கிடைத்திருக்காது என்று கூறினார்

கடந்த ஆறு மாதமாக விடுதலை சிறுத்தைகள் கட்சியையும் சீமான் கட்சியையும் கூட்டணிக்கு எடப்பாடி பழனிச்சாமி அழைத்துக் கொண்டு இருந்தார் என்றும் அவர்கள் யாரும் வரவில்லை என்ற பிறகு தான் எங்களை கூட்டணிக்கு அழைத்தார் என்றும் அன்புமணி ராமதாஸ் அறிவித்தார்

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments