Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கொரோனா விவகாரத்தில் திமுகவின் நடவடிக்கைகள் மெத்தனமாக உள்ளது: செல்லூர் ராஜூ

கொரோனா விவகாரத்தில் திமுகவின் நடவடிக்கைகள் மெத்தனமாக உள்ளது: செல்லூர் ராஜூ
, புதன், 26 மே 2021 (17:59 IST)
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு தினமும் 30 ஆயிரத்துக்கு மேல் இருந்து வரும் நிலையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதில் திமுக அரசு தவறிவிட்டதாக அதிமுக பாஜக தலைவர்களும், திமுக அரசு கொரோனா வைரஸ் விவகாரத்தை சரியாக கையாள்வதாக திமுக கூட்டணி கட்சிகளும் மாறி மாறி கூறி வருகின்றன 
 
இந்த நிலையில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவர்கள் இது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். கொரோனா காலத்தில் திமுகவின் நடவடிக்கைகள் மெத்தனமாக உள்ளது என்று அவர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
மேலும் மத்திய அரசை குறை கூறி விட்டு மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று செல்லூர் ராஜூ கூறிவருகிறார்
 
செல்லூர் ராஜுவின் இந்த கருத்துக்கு நெட்டிசன்கள் கேலியும் கிண்டலும் மாணவர்களை பதிவு செய்து வருகின்றனர். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் திமுக அரசு மெத்தனமாக இருப்பதாக ஓபிஎஸ் இபிஎஸ் ஆகியோர்களே கூறாத நிலையில் செல்லூர் ராஜூ கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பரோல் கேட்டு முதல்வருக்கு கடிதம் எழுதிய நளினி!