Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செந்தில் பாலாஜி மயக்க நிலையில் உள்ளார்: அமைச்சர் சேகர்பாபு பேட்டி!

Webdunia
புதன், 14 ஜூன் 2023 (07:46 IST)
அமைச்சர் செந்தில் பாலாஜி மயக்க நிலையில் உள்ளார் என்று அவரை நேரில் பார்த்த அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். 
 
நேற்று நள்ளிரவு திடீரென அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இதனை அடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீரென ரத்த அழுத்தம் மற்றும் நெஞ்சுவலி வந்ததாகவும் இதனை அடுத்து அவர் சென்னை பன்னோப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
 
இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி உடல் நலம் குறித்து விசாரிக்க உதயநிதி ஸ்டாலின், சேகர் பாபு, மாசுப்பிரமணியன், உள்ளிட்டோர் மருத்துவமனையில் நேரில் சென்று மருத்துவரிடம் ஆலோசித்தனர். 
 
இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி மயக்க நிலையில் உள்ளார் என்றும் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் சேகர் பாபு தெரிவித்துள்ளார். 
 
மேலும் அமைச்சர் செந்தில் பாலாஜி சுயநினைவு இல்லாமல் இருப்பதாகவும் நான்கு ஐந்து முறை பெயர் சொல்லி அழைத்தபோதும் அவர் கண் திறக்கவில்லை என்றும் அமைச்சர் சேகர் பாபு செய்தி அவர்களிடம் கூறினார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணத்திற்கு என்னை ஏன் அழைக்கவில்லை.. துப்பாக்கியால் சுட்ட பக்கத்து வீட்டுக்காரர்..!

மறுமணம் செய்த பெண் ஊழியருக்கு மகப்பேறு விடுப்பு கிடையாதா? ஐகோர்ட் கண்டனம்..!

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை.. அதேசமயம் வெயிலும் கொளுத்தும்: வானிலை அறிவிப்பு..!

தெலுங்கானாவில் இருந்து குமரிக்கு திருவண்ணாமலை வழியாக சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

வட இந்தியர்கள் பன்னிக்குட்டி போல் குழந்தைகள் பெற்றுள்ளனர்.. அமைச்சர் கருத்துக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments