Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எனக்கு துணை முதல்வர் பதவி தருவதாக ஆதவ் அர்ஜூனா கூறினார்: சீமான் பேட்டி

Mahendran
சனி, 31 மே 2025 (14:25 IST)
எனக்கு துணை முதல்வர் பதவி தருவதாக கூறி, ஆதவ் அர்ஜுனா என்னை கூட்டணிக்கு அழைத்தார் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில், அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி என இரண்டு மாபெரும் கூட்டணிகள் போட்டியிட உள்ளன.
 
இந்த நிலையில், புதிதாக கட்சி ஆரம்பித்த விஜய்யின் "தமிழக வெற்றி கழகம்" ஒரு தனி கூட்டணியை அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
ஏற்கனவே, தனித்து போட்டியிடுவோம் என நாம் தமிழர் கட்சியின் சீமான் தெரிவித்து விட்டதால், அவர் எந்த கூட்டணியிலும் இணைய மாட்டார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
இருப்பினும், தமிழக வெற்றி கழகத்துடன் நாம் தமிழர் கட்சியை கூட்டணியாக இணைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
 
அதேபோல், அதிமுக கூட்டணியில் கடைசி நேரத்தில் தமிழக வெற்றி கழகம் சேரலாம் என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த சீமான், ‘அதிமுக கூட்டணிக்கு தன்னை வருமாறு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஆதவ் அர்ஜுனா அழைத்தார் என்றும், தனக்கு துணை முதல்வர் பதவி வாங்கித் தருவதாக கூறியதாகவும், சீமான் கூறினார்.
 
இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனைவி, இரு மகள்கள் மீது கோபம்.. 3 கோடி ரூபாய் சொத்துக்களை கோவிலுக்கு எழுதி வைத்த நபர்.. குடும்பத்தினர் அதிர்ச்சி..!

தமிழகத்தில் என்ன நடக்கிறது? நிதி நெருக்கடி நிலவுகிறதா? உயர்நீதிமன்ற நீதிபதியின் சரமாறி கேள்விகள்..!

பஞ்சாயத்தாயா இது? ட்ரம்ப்பை மதிக்காமல் ஈரான் - இஸ்ரேல் மீண்டும் போர்! - ட்ரம்ப் ரியாக்‌ஷன் என்ன?

வாங்கிய கடனை கொடுக்க முடியவில்லை.. நண்பனிடம் மனைவியை விற்ற கணவன்..!

400 கிலோ யுரேனியத்தை ஈரான் மறைத்து வைத்துள்ளது: அமெரிக்கா அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments