Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு சொத்தை வக்பு சொத்து என ஆக்கிரமித்து மசூதி கட்டிய விவகாரம்: நீதிமன்றம் அதிரடி..!

Mahendran
சனி, 31 மே 2025 (14:19 IST)
அரசு சொத்தை வக்பு சொத்து என ஆக்கிரமித்து மசூதி கட்டியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் வக்பு பெயரில் ஆக்கிரமித்த ஒரு சொத்தை அதிகாரிகள் கைப்பற்ற முயன்ற போது, வக்பு நிர்வாகிகள் நீதிமன்றத்தை நாடினர்.
 
இதற்குரிய ஆவணங்களை நீதிமன்றம் கேட்ட போது, அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஐகோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்ட நிலையில், அங்கும் மனுதாரருக்கு சாதகமாக விசாரணை நடைபெறவில்லை.
 
1995 ஆம் ஆண்டு வக்பு சட்டத்தின் கீழ் சொத்து பதிவு செய்யப்பட்டது என்பதை, மனுதாரர் நிரூபிக்க முடியவில்லை. அந்த நிலம் தேசிய நெடுஞ்சாலை சொந்தமானது என்று அரசு தரப்பில் வாதம் செய்த நிலையில், அந்த வாதத்தை வெறும் வாய்மொழியாக மட்டுமே மனுதாரர் எதிர்த்தார் என்பதும், எந்தவிதமான ஆவணமும் சமர்ப்பிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இதனை அடுத்து, நீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்தது. இந்த சொத்துக்கள் மூலம் பலர் பயன்பெற்றுள்ளது ஆச்சரியமாக இருப்பதாகவும், இந்த வழக்கை தனித்துவமான வழக்காக கருதுவதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
 
மத்திய அரசு கொண்டு வந்த வக்பு சட்டத் திருத்தம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கு மத்திய அரசின் சட்டத்திற்கு உதவியாக உள்ளது. 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பயத்தில் மசோதாக்களுக்கு கவர்னர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார்: முதல்வர் ஸ்டாலின்

அயோத்தியில் 2ஆம் கட்ட கும்பாபிஷேக பூஜைகள் தொடக்கம்: பக்தர்களுக்கு கட்டுப்பாடு..!

பங்குச்சந்தை இன்று மீண்டும் சரிவு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

இந்த வாரத்தில் 2வது நாளாக உயரும் தஙக்ம் விலை.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments