சீமானுக்கு ரஜினி மேல அப்படி என்ன காண்டு? போர இடத்துலலாம் கிழிக்கிறாரூ...

Webdunia
ஞாயிறு, 13 அக்டோபர் 2019 (10:33 IST)
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது நடிகர் ரஜினிகாந்தை விமர்சித்து பேசி வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
 
விக்கிரவாண்டி, நாங்குநேரி, புதுச்சேரி காமராஜர் நகர் ஆகிய தொகுதிகளில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியினர் போட்டியிடுகின்றனர். இதற்கான வேட்பாளர் பட்டியலை அறிவித்து தேர்தல் பிரச்சாரத்திலும் ஈடுப்பட்டுள்ளார் சீமான்.  
 
தனது பிரச்சாரத்தின் போது நடிகர் ரஜினிகாந்தை மறைமுகமாகவும் விமர்சித்து வருகிறார். அப்படி சமீபத்தில் அவர் ஈடுப்பட்ட விக்கிரவாண்டி பிரச்சாரத்தின் போதும் ரஜினியை மறைமுகமாக விமர்சித்துள்ளார். சீமான் கூறியதாவது,  
நான் ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்ன மாதிரி என சினிமாவில் கூறலாம், ஆனால், இங்கு அரசியலில் ஒவ்வொன்றையும் நூறு முறை சொல்ல வேண்டும். 
 
இதுவரை பல வேஷங்களை பார்த்துவிட்டோம், இன்னொருத்தர் வர இருக்கிறார், அதையும் நாங்கள் பார்ப்போம். ஆனால், என்ன வேஷம் போட்டாலும் தமிழகத்தில் நுழைய முடியாது என பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மிளகாய் பொடி தூவி நகைக்கடையில் கொள்ளையடிக்க முயற்சித்த பெண்.. அதன்பின் நடந்த ட்விஸ்ட்..!

சகோதரர் மருத்துவமனையில் அனுமதி!.. பெங்களூர் பறக்கும் ரஜினிகாந்த்!...

பிறந்தநாளன்று தன்னை பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொண்ட காவலர்!.. வேலூரில் சோகம்...

பிகார் பெண் எம்.பி. இரண்டு முறை வாக்களித்தாரா? இரு கைகளிலும் மை இருந்ததால் சர்ச்சை..!

8க்கும் மேற்பட்ட தெருநாய்கள் கடித்து குதறியதால் 6 ஆடுகள் பலி.. நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments