Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”ரஜினி பேச்சு, அரை மணி நேரம் கழிச்சி போச்சு ”.. சீறும் சீமான்

Arun Prasath
புதன், 13 நவம்பர் 2019 (13:17 IST)
ரஜினியால் அரை மணி நேரம் கூட தன்னுடைய நிலைப்பாட்டில் நிற்கமுடியவில்லை என சீமான் கூறியுள்ளார்.

ரஜினி ”திருவள்ளுவர் மீதும் என் மீதும் காவி சாயம் பூச முடியாது” என சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறினார். அதன் பிறகு தான் கூறியதை தவறாக புரிந்துகொண்டார்கள் என விளக்கம் அளித்தார்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், ”என் மீதும் திருவள்ளுவர் மீதும் காவி சாயம் பூச முடியாத என கூறிய ரஜினிகாந்தால் அரை மணி நேரம் கூட தன் நிலைப்பாட்டில் நிற்க முடியவில்லை” என கூறினார்

மேலும் ”அவர் பேசிய பேச்சை அவரே பூசி மூழ்கினார்” என சீமான் குற்றம் சாட்டியுள்ளார். சீமான் கள அரசியலில் தீவிரமாக களமிறங்கியதிலிருந்து பல மேடைகளில் ரஜினி தமிழர் அல்ல, எனவும், தமிழர் அல்லாதவர் தமிழ்நாட்டை ஆளக்கூடாது எனவும் பல மேடைகளில் ஆவேசமாக கூறிவந்த நிலையில் தற்போது ரஜினிகாந்தை விமர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments