Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மண்ணெண்ணெய் ஊற்றி சிகரெட் வைத்து கொளுத்திய கணவன்! சென்னையில் கொடூரம்!

Webdunia
புதன், 13 நவம்பர் 2019 (13:01 IST)
சென்னையில் மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்திய நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னையில் உள்ள ஆதம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ராஜன். இவருக்கு பஞ்சவர்ணம் என்ற மனைவி உள்ளார். திருமணம் ஆகி சில வருடங்களே ஆன நிலையில் ராஜனுக்கும், பஞ்சவர்ணத்துக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் பஞ்சவர்ணத்தோடு மிகவும் ஆக்ரோஷமாக சண்டையிட்ட ராஜன், ஆத்திரத்தில் மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றியுள்ளார். பிறகு சிகரெட் நெருப்பால் பற்ற வைத்து பஞ்சவர்ணத்தை உயிரோடு கொளுத்தியுள்ளார்.

பஞ்சவர்ணத்தின் அலறல் கேட்டு அக்கம்பக்கம் இருந்தவர்கள் ஓடிவந்து காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிவரும் பஞ்சவர்ணம் போலீஸாரிடம் மேற்கண்ட சம்பவங்களை வாக்குறுதியாக அளித்துள்ளார். போலீஸார் வழக்குப்பதிவு செய்து ராஜனை கைது செய்துள்ளனர்.

கணவனே தன் மனைவியை கொடூரமாக கொல்ல முயற்சித்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments