Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தி கேரளா ஸ்டோரி படத்தை தடை செய்யாவிட்டால் தியேட்டர்களை முற்றுகையிடுவோம்: சீமான்

தி கேரளா ஸ்டோரி படத்தை தடை செய்யாவிட்டால் தியேட்டர்களை முற்றுகையிடுவோம்: சீமான்
, வெள்ளி, 5 மே 2023 (15:00 IST)
தி கேரளா ஸ்டோரி என்ற திரைப்படத்தை தமிழ்நாடு அரசு தடை செய்யாவிட்டால் திரையரங்குகளை முற்றுகையிடுவோம் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார் 
 
பெரும் சர்ச்சைக்குரிய தி கேரளா ஸ்டோரி என்ற திரைப்படம் இன்று தமிழகம் உள்பட நாடு முழுவதும் வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு ஏற்கனவே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் இந்த படத்தை திரையிட்ட திரையரங்குகள் முன்னர் இஸ்லாமிய அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
 
தமிழகத்தில் இந்த படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டர்களில் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தி கேரளா ஸ்டோரி என்ற படத்தை தமிழ்நாடு அரசு தடை செய்ய வேண்டும் என்றும் இல்லையென்றால் திரையரங்குகளை முற்றுகையிடுவோம் என்றும் சென்னையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி அளித்துள்ளார்.
 
மேலும் பாஜகவின் முதன்மை அணியே திமுக தான் என்றும் திராவிட மாடல் என்று குறித்து ஆளுநர் கூறியதை நான் கேட்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆளுனரே சொல்லிவிட்டார், திமுக ஆட்சியை கலைக்க வேண்டும்: ஜெயக்குமார்