Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுவர் கட்டும் கல்லில் வீடு கட்டியிருக்கலாம்! – சீமான் அறிவுரை

Webdunia
சனி, 22 பிப்ரவரி 2020 (14:55 IST)
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வருகையையொட்டி குஜராத்தில் அரசு செய்து வரும் பணிகள் குறித்து விமர்சித்துள்ளார் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்.
சீமான்

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக 24ம் தேதி இந்தியா வருகிறார். மேலும் குஜராத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்தையும் அவர் பார்வையிட இருக்கிறார். அவரை வரவேற்க ஒரு லட்சத்துக்கும் அதிகமானோரை குஜராத் அரசு ஏற்பாடு செய்துள்ளது. 22 கிலோ மீட்டருக்கு ஒரு லட்சம் பேர் வரிசையாக நின்று அதிபர் ட்ரம்பை வரவேற்பார்கள் என கூறப்படுகிறது.

மேலும் ட்ரம்ப் வரும்போது அப்பகுதியில் உள்ள குடிசைப்பகுதிகள் தெரியாமல் இருக்க 7 அடி உயரத்திற்கு பல கிலோ மீட்டர் தூரத்திற்கு சுவர் எழுப்பப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அரசின் இந்த சுவர் எழுப்பும் திட்டத்தை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இந்நிலையில் இதுகுறித்து கருத்து கூறியுள்ள நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் “குடிசைகளை மறைக்க சுவர் எழுப்புவது நாட்டில் உள்ள ஏழ்மையை மறைப்பதுதான். அந்த சுவர் எழுப்ப பயன்படுத்தும் செங்கலில் அந்த மக்களுக்கு வீடு கட்டிக் கொடுத்திருந்தால் அறிவுப்பூர்வமாக இருந்திருக்கும்” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments