தீயாக உழைக்க தயாரான தம்பிகள்: அதிரடியில் இறங்கிய சீமான்!!

Webdunia
திங்கள், 9 செப்டம்பர் 2019 (17:19 IST)
விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதியில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிடும் என சீமான் தெரிவித்துள்ளார். 

 
விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி இடைத்தேர்தலுக்கு திமுக கூட்டணி கட்சிகள் மற்றும் அதிமுக கூட்டணி கட்சிகள் தயாராகி வருகின்றன. இக்கட்சிகளின் வரிசையில் தற்போது சீமானின் நாம் தமிழர் கட்சியும் இணைந்துள்ளது. 
 
ஆம், விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதியில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஆண், பெண் என இரு வேட்பாளர்களை நிறுத்துவோம். 
 
இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்ததும் வேட்பாளர்கள் குறித்த விவரத்தை வெளியிடுவோம் என நா தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கூறினார். 
 
இடைத்தேர்தலில் அதிமுக, திமுக கட்சிகளுக்கு பிறகு வாக்கு வங்கியை பொருத்த வரை மூன்றாவது இடத்தில் உள்ள நாம் தமிழர் கட்சிக்கு இந்த இரண்டு தொகுதிகளும் சாதகமான சூழலை உருவாக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாடு தழுவிய 'டிஜிட்டல் கைது' மோசடி: வழக்குகளை சிபிஐ-க்கு மாற்ற உச்ச நீதிமன்றம் பரிந்துரை!

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: திமுக கூட்டணி கட்சிகள் அவசர ஆலோசனை!

நாளையே தமிழ்நாட்டில் SIR சிறப்பு திருத்தம்! முக்கிய தேதிகள்!

இன்று இரவு கொட்டித் தீர்க்கப் போகும் கனமழை! - எந்தெந்த மாவட்டங்களில்?

உ.பி. முதல்வர் யோகி குறித்து சர்ச்சைப் பேச்சு: அரசு மருத்துவர் பணியிடை நீக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments