Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நாளை அரசு விடுமுறை வேண்டும்: சீமான் கோரிக்கை!

நாளை அரசு விடுமுறை வேண்டும்: சீமான் கோரிக்கை!
, வெள்ளி, 30 அக்டோபர் 2020 (19:10 IST)
நாளை நவம்பர் ஒன்றாம் தேதி தமிழ்நாடு என்ற மாநிலம் அங்கீகரிக்கப்பட்ட நாள் என்பதால் அரசு விடுமுறை என அறிவிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் சீமான் தமிழக அரசுக்கு முக்கிய கோரிக்கை வைத்துள்ளார் 
 
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் ’இந்திய அரசு 1956 ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தை மொழிவாரி மாநிலமாக பிரித்தது. இதன்படி நவம்பர் ஒன்றாம் தேதி தமிழ்நாடு என்கிற நமது தாயக நிலம் இந்திய மத்திய அரசால் சட்டப்படி அங்கீகரிக்கப்பட்ட நிலப்பகுதியானது
 
பெரும் புகழ் கொண்ட தமிழ்நாடு உருவான நவம்பர் ஒன்றாம் தேதியை தமிழ்நாடு நாடாக அறிவிக்கும் அரசாணையை தங்களது தலைமையிலான தமிழ்நாடு அரசு 2019 ஆம் ஆண்டு அக்டோபர் 25 பிறப்பித்தது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது வரவேற்கத்தக்கது 
 
எனவே தமிழ்நாடு அரசு இத்தகைய பெருமைக்குரிய நாளை அரசு விடுமுறையாக அறிவித்து தமிழர்களின் முன்னோர்களான மூவேந்தர்களின் தமிழ் நாட்டுக் கொடியை மாநிலமெங்கும் அரசு அலுவலங்களிலும் அரசின் துறை சார்ந்த நிறுவனங்களிலும் ஏற்ற வேண்டும்’ என்று சீமான் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னையில் பயங்கர தீவிபத்து: பல கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்