Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தூரிகை தற்கொலை... கலங்கிய சீமான்!

Webdunia
சனி, 10 செப்டம்பர் 2022 (13:37 IST)
கபிலன் மகள் மரணத்திற்கு சீமான் இரங்கல் தெரிவித்து தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். 
 
தமிழ் திரையுலகின் பிரபல பாடலாசிரியர் கபிலன் ஏராளமான திரைப்படங்களுக்கு பாடலை எழுதியுள்ளார் என்பதும் அவரது பெரும்பாலான பாடல்கள் சூப்பர் ஹிட்டாகி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இவளது மகள் தூரிகை என்பவர் தனது வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். பல்வேறு திரைப்படங்களில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றிய தூரிகை தற்கொலை செய்தது ஏன் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
 
இந்நிலையில் இவரது மரணத்திற்கு சீமான் இரங்கல் தெரிவித்து தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அவர் பதிவிட்டுள்ளதாவது, புகழ்பெற்ற திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞருமான அன்புத்தம்பி கபிலன் அவர்களின் மகள் தூரிகை அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், மனத்துயரமும் அடைந்தேன். 
 
தன் உயிருக்கினிய அன்புமகளைப் பறிகொடுத்துவிட்டு, பேரிழப்பில் சிக்கித்தவிக்கும் தம்பியை ஆற்றுப்படுத்தவும் தேற்றவும் சொற்களின்றி கலங்கித்தவிக்கிறேன். கொடுந்துயரில் சிக்குண்டிருக்கும் தம்பி கபிலனுக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும் ஆறுதலைத்தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments