Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலியல் வன்கொடுமைகளுக்கு கடுமையான சட்டம் வேண்டும்! – சீமான் கோரிக்கை!

Webdunia
ஞாயிறு, 21 நவம்பர் 2021 (09:34 IST)
கரூர் பள்ளி மாணவி பாலியல் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் குறித்து நா.த.க ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் நடவடிக்கைகள் எடுக்க கோரிக்கை விடுத்துள்ளார்.

சமீபத்தில் கோவையில் பாலியல் தொல்லையால் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி மீளாத நிலையில் கரூரிலும் மாணவி ஒருவர் பாலியல் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைக்கு கடுமையான தண்டனைகள் வழங்க வேண்டுமென பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் மாணவி தற்கொலை விவவகாரம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் “கரூரில் 12ஆம் வகுப்புப் படிக்கும் தங்கை பாலியல் தொந்தரவால் தற்கொலை செய்துகொண்ட செய்தியறிந்து அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயருமடைந்தேன். தங்கையின் மரணத்திற்குக் காரணமானவர்களை சட்டத்திற்கு முன்நிறுத்தி, உச்சபட்சத் தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசே தொடங்கிய ஓட்டுனர் பயிற்சி பள்ளி.. கார், பைக் ஓட்டும் பயிற்சிக்கு எவ்வளவு கட்டணம்?

அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும்.! ராகுலுக்கு பறந்த உத்தரவு..!!

இன்று இரவு 10 மாவட்டங்களில் கொட்டப்போகுது மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அப்பர் பெர்த் கழன்று விழுந்ததால் ரயில் பயணி பரிதாப பலி.. ரயில் பயணத்தில் பாதுகாப்பு இல்லையா?

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எத்தனை பேர் போட்டி: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

அடுத்த கட்டுரையில்