Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஸ்டெர்லைட் ஆலையை திறந்தால் தமிழகம் போர்களமாகும் – சீமான் எச்சரிக்கை!

ஸ்டெர்லைட் ஆலையை திறந்தால் தமிழகம் போர்களமாகும் – சீமான் எச்சரிக்கை!
, திங்கள், 26 ஏப்ரல் 2021 (11:23 IST)
ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ள நிலையில் இதற்கு சீமான் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை எழுந்துள்ள நிலையில் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய வேதாந்தா நிறுவனம் அனுமதி கேட்டு கோரிக்கை விடுத்தது. இதற்கு தமிழக அரசு மறுத்த நிலையில் தமிழக அரசு ஸ்டெர்லைட்டில் ஆக்ஸிஜன் தயாரிக்க முடியுமா என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

இது தொடர்பாக இன்று முதல்வர் பழனிசாமி தலைமையில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் பல கட்சிகளும் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்வதற்கு மட்டும் அனுமதிக்கலாம் என ஆதரவை தெரிவித்துள்ளன.

இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் “ஆக்ஸிஜன் பற்றாக்குறையை காரணம் காட்டி ஸ்டெர்லைட்டை மீண்டும் திறக்க முயல்கிறார்கள். கொரோனா பேரிடர் சூழலைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டு ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க முற்பட்டால் தமிழகம் போர்க்களமாக மாறும்; சட்டம் ஒழுங்கு சிக்கல் ஏற்படும்!” என்று அறிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஸ்டெர்லைட்டுக்கு எதிரானவன்தான்.. ஆக்ஸிஜனுக்காக ஒத்துக்கிறேன்! – திருமாவளவன் கருத்து!