Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சீமானை கைது செய்து சிறையில் அடைக்க பாஜக சதி செய்கிறதா?

சீமானை கைது செய்து சிறையில் அடைக்க பாஜக சதி செய்கிறதா?

சீமானை கைது செய்து சிறையில் அடைக்க பாஜக சதி செய்கிறதா?
, வெள்ளி, 28 ஜூலை 2017 (18:43 IST)
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வன்முறைத் தூண்டியதாகக் கூறி 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சீமான் இது பாஜகவின் திட்டமிட்ட சதி என கூறியுள்ளார்.


 
 
கடந்த சில தினங்களுக்கு சேலத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய சீமான் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக புகார் எழுந்தது. இதையடுத்து சீமான் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
 
இந்நிலையில் இந்த வழக்குகள் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சீமான், தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்படுவதையும் அவர்கள் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதையும் பற்றி கடந்த 5 ஆண்டுகளாக நான் பேசி வருகிறேன்.
 
நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் நெய்தல் படை அமைத்து மீனவர்களைப் பாதுகாப்போம் என்றும் கூறி வருகிறேன். மீனவர்கள் இந்த நெய்தல் படையில் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு துப்பாக்கியைக் கொடுப்போம் என்று பல கூட்டங்களில் நான் பேசியிருக்கிறேன்.
 
ஆனால் அப்போதெல்லாம் என் மீது பாயாத வழக்கு இப்போது பாய்ந்துள்ளது. நான் மத்திய அரசை தொடர்ந்து விமர்சித்து வருதால் பாஜக என்னைக் குறிவைத்து சதித் திட்டம் தீட்டி கைது செய்யது என்னை எப்படியாவது சிறையில் அடைக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது என குற்றம் சாட்டியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆக்சிஸ் வங்கியுடன் போட்டி போட்டு மூக்கை உடைத்து கொண்ட அமேசான்!!