Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இது ஒகே தான், இருந்தாலும் இதையும் பண்ணலாம்: சீமான் ட்விட்!

இது ஒகே தான், இருந்தாலும் இதையும் பண்ணலாம்: சீமான் ட்விட்!
, திங்கள், 3 ஆகஸ்ட் 2020 (13:43 IST)
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் புதிய கல்வி கொள்கை குறித்த முதல்வரின் நிலைபாட்டை பாராட்டியுள்ளார். 
 
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக குரல்கள் ஒலிக்க தொடங்கியுள்ள நிலையில் இன்று இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டுள்ளார். அதில் பேசிய அவர் மத்திய அரசு மும்மொழி கொள்கையை புதிய கல்வி திட்டத்தின் மூலம் கொண்டு வருவது வேதனையளிக்கிறது. தமிழகத்தில் மும்மொழி கொள்கையை எவ்விதத்திலும் அனுமதிக்க முடியாது. தமிழகத்தில் இருமொழி கொள்கையே தொடரும் என உறுதியாக தெரிவித்துள்ளார்.
 
மேலும், மாநில அரசுகளில் கல்வி கொள்கையின் அடிப்படையில் புதிய கல்வி திட்டங்களை நடைமுறைப்படுத்தி கொள்ள மத்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும். அனைத்து மக்கள்ன் கோரிக்கைகளை ஏற்று புதிய கல்வி கொள்கைகளில் மாற்றங்களை ஏற்படுத்திட வேண்டும் எனவும் கூறியுள்ளார். 

 
முதல்வரின் இந்த கருத்துக்கு தமிழக மக்களிடம் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன. தமிழக மக்கள் மட்டுமின்றி தமிழக அரசியல் தலைவர்களும் இந்த முடிவை பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, 
 
புதிய கல்விக்கொள்கையின் ஒரு‌‌ கூறான மும்மொழி கொள்கையைத் தமிழகத்தில் நடைமுறைப்படுத்த மாட்டோம் எனும் தமிழக முதலமைச்சரின் அறிவிப்பை வரவேற்கிறேன். மாநிலங்களின் தன்னாட்சி கல்வியுரிமைகளை மொத்தமாய் பறித்து மத்தியில் அதிகாரங்களைக் குவித்து ஒற்றைப்பாடத் திட்டத்தின் மூலம் தேசிய இனங்களின் வரலாற்றை மறைக்கும் ஒற்றைமயக் கல்விக்கொள்கையை மொத்தமாய் எதிர்க்க வேண்டும் என வலியுறுத்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மும்மொழி கொள்கையவா எதிர்க்குறீங்க? – திமுகவுக்கு லிஸ்ட் தயாரிக்கும் எச்.ராஜா!