Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலினுக்கு எதிராக போட்டியிடாதது ஏன் ? சீமான் பதில்!

Webdunia
திங்கள், 8 மார்ச் 2021 (08:28 IST)
நேற்று  நாம் தமிழர் கட்சியின் 234 வேட்பாளர்களும் ஒரே மேடையில் அறிவிக்கப்பட்டார்கள். அதில் சீமான் சென்னையின் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது.

நாம் தமிழர் கட்சியின் சார்பாக 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் நேற்று அறிவிக்கப்பட்டனர். அதில் பெண்களுக்கு 50 சதவீதம் ஒதுக்கப்பட்டு 117 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் முன்னதாக சீமான் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எதிராக கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு அவரை வீழ்த்துவேன் என சவால் விட்டிருந்தார்.

இந்நிலையில் இப்போது திருவொற்றியூருக்கு மாறியது குறித்து ‘ஒருவரை எதிர்த்து வெல்வதைக் காட்டிலும் என் மக்களைக் காப்பதே முக்கியம் என்பதால் திருவொற்றியூர் தொகுதியில் நிற்கிறேன்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று மாலை 10 மாவட்டங்களில் மழை கொட்டும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கூட்டணி குறித்து அண்ணாமலை பொதுவெளியில் பேசக்கூடாது: தமிழிசை அறிவுரை

இதில் கூட லாப நோக்கமா? விமான விபத்தில் இறந்தவர்கள் பெயரில் போலி சமூக வலைத்தள கணக்குகள்..!

ஈரானில் சிக்கிய இந்தியர்கள் வெளியேற தனிப்பாதை அமைத்து கொடுத்த ஈரான்.. உடனடி நடவடிக்கை..!

இனிமேல் 10 வினாடிகள் தான்.. இன்று முதல் யுபிஐ பரிவர்த்தனைகளில் ஒரு முக்கிய மாற்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments