திருவாரூர் தொகுதியின் முதல் வேட்பாளர் அறிவிப்பு

Webdunia
புதன், 2 ஜனவரி 2019 (19:42 IST)
முன்னாள் திமுக தலைவர் மு.கருணாநிதி காலமானதால் காலியான திருவாரூர் தொகுதிக்கு வரும் 28ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் இந்த தொகுதியின் வேட்பாளரை தேர்வு செய்வதில் அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் பிசியாக உள்ளன.

இந்த நிலையில் திருவாரூர் இடைத்தேர்தலில் யாருடனும் கூட்டணி அமைக்காமல் தனித்து போட்டியிடுவோம் என்று அறிவித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், சற்றுமுன் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக சாகுல் அமீது என்பவரை அறிவித்துள்ளார். மேலும் இவருடைய வெற்றிக்கு கட்சியின் அனைத்து பொறுப்பாளர்களும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த நிலையில் திமுக சார்பில் மு.க.ஸ்டாலின் இந்த தொகுதியில் போட்டியிட அதிக வாய்ப்பு இருப்பதாகவும், தினகரன் சார்பில் ஒரு முக்கிய வேட்பாளரும், அதிமுக சார்பில் ஒரு பிரபலமும் போட்டியிடுவார்கள் என்று கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் பீகாரில் என்.டி.ஏ ஆட்சி.. ஜீரோவாகும் பிரசாந்த் கிஷோர்.. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் ஆச்சரியம்..!

இஸ்லாமாபாத் தாக்குதல்களுக்கு இந்தியா தான் காரணம்.. ஷெபாஸ் ஷெரிஃப் குற்றச்சாட்டு..!

புரியாமல் பேசுகிறார் முதல்வர் ஸ்டாலின்: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி..!

ஞாயிறு அன்று தீபாவளி.. 2026 ஆம் ஆண்டுக்கான அரசு பொது விடுமுறை தினங்களின் பட்டியல்..!

விரைவில் சண்முகம் மீது சட்ட நடவடிக்கை?.. டிஜிபிக்கு மகளிர் ஆணையம் பரிந்துரை!..

அடுத்த கட்டுரையில்
Show comments