Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை மெரினாவில் குளிக்க தடை.. கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள்..!

Siva
வியாழன், 16 ஜனவரி 2025 (12:35 IST)
இன்று காணும் பொங்கல் கொண்டாடப்பட இருப்பதை அடுத்து, சென்னை மெரினாவில் லட்சக்கணக்கான மக்கள் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், பாதுகாப்பு காரணங்களை கணக்கில் கொண்டு, சென்னை மெரினாவில் குளிக்க தடை என்று காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

மேலும், சென்னை மெரினாவுக்கு வருபவர்கள் கடற்கரையில் கடலில் இறங்காமல் தடுக்க கட்டைகள் அமைக்கப்பட்டு, போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
மேலும், பொதுமக்களின் வசதிக்காக 127 சிறப்பு கழிவறைகள் ஆறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ளதுடன், பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய 2000 லிட்டர் குடிநீர் ஆறு இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும், காணும் பொங்கலுக்கு மெரினாவுக்கு வரும் குழந்தைகள் காணாமல் போவதை தடுக்கும் வகையில், அல்லது காணாமல் போன குழந்தைகளை கண்டுபிடிக்கும் வகையில், மாநகர காவல் துறை சார்பாக, குழந்தைகளின் கையில் கைப்பட்டைகள் போலீசார் கட்டி விட திட்டமிட்டுள்ளனர்.

மேலும், 12 இடங்களில் கண்காணிப்பு உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டு, போலீசார் அதனை கண்காணித்து வருவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments