Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த தேர்தல் இரண்டாவது சுதந்திரப் போர்! கோவையில் கமல்ஹாசன் ஆவேசம்!

Siva
புதன், 17 ஏப்ரல் 2024 (10:51 IST)
நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தல் இரண்டாவது சுதந்திரப் போர் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கோவையில் பிரச்சாரம் செய்தார்.

கோவையில் திமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்த கமல்ஹாசன் வரும் பாராளுமன்ற தேர்தல் என்பது சாதாரண மற்ற தேர்தலை போல் கிடையாது என்றும் இது ஒரு இரண்டாவது சுதந்திரப் போர் என்றும் தெரிவித்தார்.

சிறையில் கஷ்டப்பட்டு செக்கிழுத்து, வாழ்விழந்து மீட்ட சுதந்திரம் வெள்ளையர்களை வெளியேற்றினாலும் அந்த தியாகம் எல்லாம் இன்று கொள்ளையர்கள் கையில் நாடு இருக்கிறது

நடக்க இருப்பது இரண்டாவது சுதந்திரப் போர், எனவே ஏப்ரல் 19ஆம் தேதி நீங்கள் சரியான முடிவு எடுத்தால், ஜூன் 4-ம் தேதி இரண்டாவது சுதந்திர நாள் என்று கோவையில் திமுக வேட்பாளர் ஆதரித்து கமல்ஹாசன் பேசினார்

திமுக கூட்டணியில் கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி இருந்தாலும் அந்த கட்சிக்கு ஒரு தொகுதி கூட கொடுக்கப்படவில்லை என்றும் இருப்பினும் கமல்ஹாசன் திமுக கூட்டணிக்காக பிரச்சாரம் செய்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments