Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போர் போட்டா உப்பு தண்ணீதான் வரும்... ஆதள பாதாளத்தில் நிலத்தடி நீர்

Webdunia
வியாழன், 1 ஆகஸ்ட் 2019 (10:19 IST)
சென்னையில் நிலத்தடி நீர் மட்டம் கடந்த 7 ஆண்டுகளில் கடுமையாக சரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
சென்னை மக்களின் குடிநீர் தேவை 80 கோடி லிட்டர் ஆகும். அனாஅல், அந்த அளவிற்கு சென்னையில் தண்ணீர் இல்லை. அதேபோல் நிலத்தடி நீரை பொருத்தவரை கடந்த 7 ஆண்டுகளில் முன்பு இருந்த நிலத்தடி நீர் மட்டம் இப்போது பெரிய அளவில் சரிந்துவிட்டது. 
 
பல்வேறு இடங்களில் 3 முதல் 4 மீட்டர் வரை நிலத்தடி நீர் மட்டம் சரிந்துவிட்டது என தகவல் தெரிவிக்கின்றனர். குறிப்பாக சென்னையில் நிலத்தடி நீர் மட்டம் பல இடங்களில் 200 அடி முதல் 400 அடிவரை சென்றுவிட்டது. 
 
இதன் விளைவாக கடல் நீர் உட்புகும் ஆபத்து உள்ளது என எச்சரிக்கைவிடப்பட்டுள்ளது. எனவே நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். 
அப்படி கடல் நீர் உட்புகுந்தால், நிலத்தடி நீர் உப்பு நீராக மாறிவிடும். அதையே நாம் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டுவிடும். 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments