Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனித நேய மக்கள் கட்சிக்கு சின்னம் ஒதுக்கிய தேர்தல் ஆணையம்!

Webdunia
செவ்வாய், 9 மார்ச் 2021 (18:27 IST)
மனித நேய மக்கள் கட்சிக்கு சின்னம் ஒதுக்கிய தேர்தல் ஆணையம்!
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் திமுக மற்றும் அதிமுக கூட்டணி தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன என்பதும் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கி ஒப்பந்தம் செய்து வருகின்றன என்பதும் தெரிந்தது
 
அந்த வகையில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறித்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். அந்த இரண்டு தொகுதிகள் எவை எவை என்பது குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
இந்த நிலையில் மனித நேய மக்கள் கட்சிக்கு தேர்தல் ஆணையம் சற்றுமுன் சின்னத்தை ஒதுக்கி உள்ளது. அந்த கட்சிக்கு தேர்தல் ஆணையம் கத்திரிக்கோல் சின்னத்தை ஒதுக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
மனிதநேய மக்கள் கட்சிக்கு கத்திரிக்கோல் சின்னம் தேர்தல் ஆணையத்தால் ஒதுக்கப்பட்டதை அக்கட்சியின் நிர்வாகிகள் உறுதி செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments