Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லீவ் விடாத பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை - மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

Webdunia
வெள்ளி, 5 அக்டோபர் 2018 (08:54 IST)
சென்னையில் உத்தரவை மீறி இன்று திறக்கப்படும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.
சென்னையின் பல பகுதிகளில் நேற்று இரவு முதல் தற்போது வரை நல்ல மழை பெய்து வருகிறது. விடிய விடிய பெய்து வரும் மழையால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. 
 
எனவே சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளித்து  சென்னை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். 
 
ஆனால் ஆட்சியரின் உத்தரவையும் மீறி சென்னையில் சில பள்ளிகள் வழக்கம்போல் இயங்குவதாக புகார் கூறப்பட்டது. 
 
இதனையடுத்து இது குறித்து பேசிய ஆட்சியர் உத்தரவை மீறி இயங்கும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மழையில் பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு எதாவது ஆனால் பள்ளி நிர்வாகம் தான் பதில் கூற வேண்டும் என எச்சரித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கணவனின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த மனைவி.. கள்ளக்காதல் காரணமா?

ஓபன் ஏஐ முறைகேட்டை வெளிப்படுத்திய இந்தியர் மரணம்.. தற்கொலை என முடிக்கப்பட்ட வழக்கு..!

டெல்லி ரயில் நிலையத்தில் அதிகரிக்கும் கூட்டம்.. பிளாட்பார்ம் டிக்கெட் நிறுத்தம்..!

மகளிர் இலவச பேருந்துகளை அதிகரிக்க முடிவு.. தமிழக அரசின் அதிரடி திட்டம்..!

சீனாவை எதிரி என்று கருதுவதை நிறுத்த வேண்டும்: காங்கிரஸ் மூத்த தலைவர் கருத்துக்கு பாஜக கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments