Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதுவை ஐடியாவை தமிழகமும் பின்பற்றலாமே?

Webdunia
வியாழன், 28 அக்டோபர் 2021 (11:41 IST)
புதுச்சேரியில் நவம்பர் 8 முதல் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிப்பு.

 
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது மெல்ல பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் நவம்பர் 1 முதல் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
அதை தொடர்ந்து தற்போது புதுச்சேரியிலும் பள்ளிகள் திறப்பு குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நவம்பர் 8 முதல் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும். காலை 9.30 முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே பள்ளிகள் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் பள்ளிகள் திங்கள் முதல் சனிக்கிழமை வரை வாரத்தில் 6 நாட்கள் அரை நாள் மட்டும் சுழற்சி முறையில் இயங்கும். அதாவது, 1, 3, 5, 7 ஆம் வகுப்புகள் திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளிலும், 2, 4, 6, 8 ஆம் வகுப்புகள் செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளிலும் நடைபெறும். 
 
மாணவர் சிறப்பு பஸ்களை இயக்க தற்போது டெண்டர் விடப்பட்டுள்ளது. அதை இறுதி செய்த பின்னர் மாணவர் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். 9 ஆம் வகுப்புக்கு மேல் முழுநேரமும் வகுப்புகளை நடத்த திட்டமிடப்பட்டு வருகிறது. 
 
தமிழகத்தில் 1 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் தீபாவளிக்கு பள்ளிகள் எத்தனை நாட்கள் விடுமுறை அளிக்கப்படும் என கேள்வி எழுந்துள்ளது. ஆனால் புதுச்சேரியில் தீபாவளி முடிந்த பின்னர் பள்ளிகள் திறக்கப்படுகிறது.  

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments