Publish Date: Wed, 11 Aug 2021 (17:31 IST)
Updated Date: Wed, 11 Aug 2021 (17:36 IST)
விரைவில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது . இரண்டு வருடஙக்ள் கழித்து பள்ளிகள் திறப்பதால் இதுகுறித்த மீம்ஸ் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த ஆண்டு சீனாவில் இருந்து உலக நாடுகளுக்கு கொரோனா பரவிய நிலையில், அமெரிக்கா, பிரேசில் நாடுகளை அடுத்த இந்தியா அதிக பாதிப்புகளைச் சந்தித்து வருகிறது. கொரோனா முதல் அலை முடிந்து தற்போது 2 வது அலை பரவிவருகிறது.
விரைவில் 3 வது அலை பரவும் அபாயமுள்ளது என அரசு எச்சரித்துள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி பள்ளிகளைத் திறக்கத் தயாராக உள்ளதாக அமைச்சர் தகவல் தெரிவித்தார்.
ஒன்றைரை ஆண்டுகளாகப் பள்ளிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலம் மாணவர்கள் பாடம் கற்று வரும் நிலையில் பள்ளிகள் திறக்கப்படுவது குறித்த மீம்ஸ் வைரலாகி வருகிறது.