Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிட்டத்தட்ட 600 நாட்களுக்கு பின் பள்ளிகள்: என்னென்ன நடக்கும்?

Webdunia
திங்கள், 1 நவம்பர் 2021 (08:42 IST)
தமிழகத்தில் சுமார் 586 நாட்களாக மூடிக்கிடந்த சுமார் 32 ஆயிரம் பள்ளிகள் இன்று திறக்கப்படுகின்றன. 

 
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில் இன்று முதல் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. ஆம் தமிழகத்தில் சுமார் 586 நாட்களாக மூடிக்கிடந்த 1 முதல் 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் படிக்கும் 32 ஆயிரம் தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் இன்று திறக்கப்படுகின்றன. 
 
இன்று பள்ளிக்கு வரும் அரசு பள்ளி மாணவ மாணவியருக்கு பாடங்கள் நடத்தப்படமாட்டாது. அதற்கு பதிலாக கலை நிகழ்ச்சிகள், நாடகங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தி உற்சாகப்படுத்தும் பணிகள் நடக்கும். அதோடு அடுத்த 15 நாட்களுக்கு கதை, பாடல் விளையாட்டு, ஓவியம் வரைதல், வண்ணம் தீட்டுதல் போன்ற செயல்பாடுகள் நடக்கும்.பின்னரே பாடங்கள் எடுக்கப்படும். 
 
மேலும் தனியார் பள்ளிகளை பொறுத்த வரையில் 4,726 பள்ளிகள் இன்று முழு வீச்சில் தொடங்க உள்ளன. அதோடு திருவாரூர், நெல்லை, விழுப்புரம், கடலூர், வேலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு கனமழை காரணமாக இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்பது கூடுதல் தகவல். 

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments