Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரையாண்டு விடுமுறை நிறைவு: நாளை பள்ளிகள் திறப்பு.. தயார் நிலையில் மாணவர்கள்..!

Mahendran
புதன், 1 ஜனவரி 2025 (14:36 IST)
அரையாண்டு தேர்வு மற்றும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை இன்றுடன் நிறைவு பெறுவதை அடுத்து, நாளை முதல் பள்ளி திறக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு டிசம்பர் 23ஆம் தேதி அரையாண்டு தேர்வு முடிவடைந்து விடுமுறை தொடங்கியது. தற்போது அனைத்து மாணவர்களும் அரையாண்டு தேர்வு விடுமுறையில் இருந்தனர். இந்த விடுமுறை கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறையுடன் இணைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் ஜனவரி 2ஆம் தேதி மீண்டும் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதன் மூலம் ஒன்பது நாள் விடுமுறை இன்றுடன் முடிந்து, நாளை முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. மாணவ, மாணவிகள் தயார் நிலையில் உள்ளனர்.

மேலும், ஜனவரி 2ஆம் தேதி முதல் அனைத்து பள்ளிகளிலும் அடுத்த பருவ தேர்வுக்கான பாடங்கள் தொடங்கப்படும் என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments