Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அரையாண்டு விடுமுறை நிறைவு: நாளை பள்ளிகள் திறப்பு.. தயார் நிலையில் மாணவர்கள்..!

Advertiesment
அரையாண்டு விடுமுறை நிறைவு: நாளை பள்ளிகள் திறப்பு.. தயார் நிலையில் மாணவர்கள்..!

Mahendran

, புதன், 1 ஜனவரி 2025 (14:36 IST)
அரையாண்டு தேர்வு மற்றும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை இன்றுடன் நிறைவு பெறுவதை அடுத்து, நாளை முதல் பள்ளி திறக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு டிசம்பர் 23ஆம் தேதி அரையாண்டு தேர்வு முடிவடைந்து விடுமுறை தொடங்கியது. தற்போது அனைத்து மாணவர்களும் அரையாண்டு தேர்வு விடுமுறையில் இருந்தனர். இந்த விடுமுறை கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறையுடன் இணைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் ஜனவரி 2ஆம் தேதி மீண்டும் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதன் மூலம் ஒன்பது நாள் விடுமுறை இன்றுடன் முடிந்து, நாளை முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. மாணவ, மாணவிகள் தயார் நிலையில் உள்ளனர்.

மேலும், ஜனவரி 2ஆம் தேதி முதல் அனைத்து பள்ளிகளிலும் அடுத்த பருவ தேர்வுக்கான பாடங்கள் தொடங்கப்படும் என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.


Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முஸ்லீம்களுக்கு வக்பு வாரியம் போல், இந்துகளுக்கு சனாதன வாரியம்: வலுக்கும் கோரிக்கைகள்..!