Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீலகிரியை அடுத்து மேலும் சில மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை!

Webdunia
வியாழன், 4 ஆகஸ்ட் 2022 (07:44 IST)
தமிழகத்தில் உள்ள ஒரு சில மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது என்பதும் குறிப்பாக நீலகிரி மாவட்டம் மற்றும் நாகர்கோவில் கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
 
இதனை அடுத்து ஒரு சில பகுதிகளில் மட்டும் பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். 
 
இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தை அடுத்து தற்போது தேனி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் இன்று கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக கல்லூரிகள் செயல்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்
 
மேலும் கோவை மாவட்டம் வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை என்றும் கோவை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
அதேபோல் கொடைக்கானல் சிறுமலை பகுதியில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவை தாக்க தயார் நிலையில் ஈரான்.. உலகப்போர் மூளுமா?

மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவு கால்நடைகளுக்கு விற்கப்படுகிறதா? அண்ணாமலை ஆவேசம்

பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த யூடியூபர்.. அதிரடியாக கைது செய்த போலீஸ்..!

2029ஆம் ஆண்டும் மோடி தான் பிரதமர்.. சிவசேனாவுக்கு பதிலடி கொடுத்த முதல்வர்..!

விடுபட்டோருக்கு மகளிர் உரிமை தொகை எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments