Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதுச்சேரியில் 1-9 வகுப்புகளுக்கு பள்ளிகள் மூடல்!

Webdunia
ஞாயிறு, 9 ஜனவரி 2022 (16:01 IST)
கொரோனா பரவல் காரணமாக புதுச்சேரியில் 1-9 வகுப்புகளுக்கு பள்ளிகள் நாளை (ஜன 10) முதல் மூடப்படுவதாக அறிவிப்பு. 

 
தமிழகம் முழுவதும் மீண்டும் டெல்டா வகை கொரோனா மற்றும் ஒமிக்ரான் வேகமாக பரவ தொடங்கியுள்ள சூழலில் பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்தது. அதோடு தமிழகத்தில் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை நீட்டிக்கப்படுவதாக அறிவித்தது. மேலும் 9 முதல் 12 வகுப்புகளுக்கு பள்ளிகள் நடைபெறும் என்றும், இல்லம் தேடி கல்வி திட்டமும் செயல்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
 
இதனைத்தொடர்ந்து தற்போது கொரோனா பரவல் காரணமாக புதுச்சேரியில் 1-9 வகுப்புகளுக்கு பள்ளிகள் நாளை (ஜன 10) முதல் மூடப்படுவதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் 1-9 வகுப்புகளுக்கு பள்ளிகள் மூடப்பட்டாலும் ஆன்லைனில் வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. வர்த்தகர்கள் மகிழ்ச்சி..!

ஈபிஎஸ் பெயரில் கேரள அரசு அலுவலகத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்.. அதிர்ச்சி தகவல்..!

விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல: உயர்நீதிமன்றம்

அரசு பள்ளிகளில் இனி காலை உணவில் உப்புமா இல்லை: அமைச்சர் கீதா ஜீவன்

வக்பு சட்டத்தில் மட்டும் ஏன் புதிய நடைமுறை? சுப்ரீம் கோர்ட் கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments