Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. கல்வி அமைச்சர் அறிவிப்பு..!

Siva
ஞாயிறு, 1 டிசம்பர் 2024 (17:08 IST)
நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என புதுச்சேரி மாநில கல்வி அமைச்சர் நமச்சிவாயம் சற்றுமுன் அறிவித்துள்ளார்.

புதுவையில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வரலாறு காணாத மழை பெய்து உள்ள நிலையில், அங்கு பெரும்பாலான வீடுகளில் வெள்ள நீர் புகுந்துள்ளதாகவும், இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே புதுச்சேரியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள் முகாம்களாக மாற்றப்பட்டு, அங்கு வீடுகளை இழந்த பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில், நாளை புதுச்சேரி மாநிலம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என கல்வி அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.

புதுவையில் இயல்பு நிலை திரும்பும் வரை பள்ளி, கல்லூரிகளுக்கு அநேகமாக விடுமுறை இருக்கும் எனவும், ஆனால் அதற்கான அறிவிப்புகள் தினசரி வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல், தமிழகத்திலும் சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்க வாய்ப்பு இருப்பதாகவும், இது குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments