செல்போன் சார்ஜ் போட்டபோது ஷாக்.. சென்னை பள்ளி மாணவி பரிதாப பலி..!

Siva
ஞாயிறு, 23 மார்ச் 2025 (12:30 IST)
சென்னையில் 14 வயது பள்ளி மாணவி செல்போனில் சார்ஜ் போடும் போது ஷாக் அடித்து பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
சென்னை எர்ணாவூர் பகுதியில் முகுந்தன் என்பவரின் மகள் அனிதா, தனது வீட்டில் செல்போனுக்கு சார்ஜ் போட்ட போது திடீரென மின்சாரம் தாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. உடனடியாக சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
ஈரமான கையுடன் செல்போனுக்கு சார்ஜ் போட்டதால்தான் மின்சாரம் தாக்கியதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த நிலையில், மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக எண்ணூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
செல்போன் சார்ஜ் செய்யும் போது மிகுந்த கவனத்துடன் சார்ஜர் பயன்படுத்த வேண்டும், பிளக் பாயிண்ட்டை இணைக்கும் முன்பாகவே சுவிட்சை ஆன் செய்யக்கூடாது, மற்றும் ஈர கையுடன் செல்போன் சார்ஜ் செய்யக் கூடாது என அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மாதமாக டிஜிட்டல் அரெஸ்டில் இருந்து பெண் மென்பொருள் பொறியாளர்.. ரூ.32 கோடி இழப்பு..!

தென்மேற்கு வங்கக்கடலில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. கனமழை எச்சரிக்கை..!

முதல்வர் ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. 13 திரையுலக பிரபலங்கள் வீடுகளுக்கும் மிரட்டல்..!

தமிழகத்தில் தேர்தல் பணிகள் முடக்கம்: வாக்காளர் பட்டியல் திருத்த பணியை புறக்கணிக்க வருவாய்த்துறை முடிவு!

லாலு பிரசாத் யாதவ் வீட்டில் குடும்ப சண்டை.. வீட்டை விட்டு வெளியேறிய 4 மகள்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments