Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: பள்ளி முதல்வர் கைது

Sinoj
வியாழன், 18 ஜனவரி 2024 (12:56 IST)
திண்டிவனம் அடுத்த ரெட்டணை கிரீன் பாரடைஸ் சிபிஎஸ்இ பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் பள்ளி முதல்வர் கார்த்திகேயன் கைது செய்யப்பட்டுள்ளார்.
 

திண்டினவத்தை அடுத்த ரெட்டணை கிரீன் பாரடைஸ் என்ற சிபிஎஸ்இ பள்ளியில் நூற்றுக் கணக்கான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

இப்பள்ளியில் படித்து வரும் 10 ஆம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. அதாவது, கடந்த ஓராண்டாகவே அவர் தனது தனி அறைக்கு மாணவிகளை அழைத்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

இதுகுறித்து, மாணவிகள், சக மாணவியரிடம் தெரிவித்து, அவர்கள் மூலம் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், பலகட்ட விசாரணைக்கு பின்னர், போக்சோ வழக்கில் பள்ளி முதல்வர் கார்த்திகேயனை போலீஸார் கைது செய்தனர்.

அதன்பின்னர், அவரை விழுப்புரம் போக்சோ நீதிமன்றத்திற்கு போலீஸார் அழைத்துச் சென்றுள்ளனர்.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்