Webdunia - Bharat's app for daily news and videos

Install App

200 கிலோ எடை கொண்ட ராமர் சிலை..! கிரேன் மூலம் கருவறைக்குள் வைப்பு..!!

Senthil Velan
வியாழன், 18 ஜனவரி 2024 (12:55 IST)
அயோத்தி ராமர் கோயிலுக்குள் பிரதிஷ்டை செய்யப்படவுள்ள 200 கிலோ எடை கொண்ட குழந்தை ராமர் சிலை சிறப்பு பூஜைகளுக்கு பிறகு கிரேன் மூலம் கருவறைக்குள் வைக்கப்பட்டது.
 
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலின் குடமுழுக்கு விழா வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ஒட்டுமொத்த இந்துக்களிடையேயும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விழாவில், பிரதமர் மோடி கோயில் கருவறையில் சிலையை பிரதிர்ஷ்டை செய்ய உள்ளார். இதைமுன்னிட்டு அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 
 
இந்த விழாவில் பங்கேற்க அரசியல்வாதிகள், ஆன்மீகம், சினிமா, விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

ALSO READ: கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்.! அரசுக்கு ஜி கே வாசன் வைத்த முக்கிய கோரிக்கை.!!
 
இந்நிலையில் அயோத்தி ராமர் கோயிலுக்குள் பிரதிஷ்டை செய்யப்படவுள்ள 200 கிலோ எடை கொண்ட குழந்தை ராமர் சிலை சிறப்பு பூஜைகளுக்கு பிறகு கிரேன் மூலம் கருவறைக்குள் வைக்கப்பட்டது. சிலை பிரதிஷ்டை விழாவுக்காக அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
 
கோவில் வளாகத்தில் சுமார் 8000 பேர் பங்கேற்கும் வகையில் இருக்கை வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. ராமர் சிலை பிரதிஷ்டை விழாவில் இந்திய பாரம்பரிய இசை வாத்தியங்கள் இசைக்கப்பட உள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸ்மாக் மதுபானம் குறித்து அமைச்சர் துரைமுருகன் கூறும் கருத்து உண்மைதான்.. அண்ணாமலை

அதிமுக பிரமுகர் கொலை.. ஆடு விற்பனை தொடர்பான முன்பகையா? 3 பேர் கைது

பீகாரை தொடர்ந்து ஜார்கண்டிலும் இடிந்து விழும் பாலங்கள்! மக்கள் அதிர்ச்சி!

பிளக்ஸ் போர்டு வைக்கும் போது மின்சாரம் தாக்கி 15 வயது சிறுவன் உயிரிழப்பு.. திருவாரூரில் அதிர்ச்சி..!

சென்னையில் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம்.. அடிபம்பிற்கு பூட்டு போட்டதால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments