Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கனமழை எதிரொலி: எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகள் விடுமுறை..!

Siva
செவ்வாய், 19 நவம்பர் 2024 (08:11 IST)
கனமழை காரணமாக தமிழகத்தில் உள்ள சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்றும், மிதமான மழை காரணமாக இந்த விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

அதேபோல், நாகப்பட்டினத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் அறிவித்துள்ளார். மேலும், தஞ்சையில் தற்போது மிதமான மழை பெய்து வரும் நிலையில், தஞ்சையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் முடிவு செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார். எனவே, ஒரு சில பள்ளிகளுக்கு தஞ்சை மாவட்டத்தில் இன்று விடுமுறை அளிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும், காரைக்கால் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்றும், கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள மற்ற மாவட்டங்களில் வழக்கம் போல் பள்ளிகள், கல்லூரிகள் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவின் மதுரை மாநாடு.. பிரமாண்டமான ஏற்பாடுகள்.. 4 மணி நேர அரசியல் புயல்..!

திடீரென ஏர்டெல் நெட்வொர்க்கில் ஏற்பட்ட சிக்கல்: வாடிக்கையாளர்கள் அவதி

விபத்தில் இறந்த நபரின் பிணத்தை தள்ளுவண்டியில் எடுத்து சென்ற காவல்துறை அதிகாரி: அதிர்ச்சி சம்பவம்

ஒருமுறை ரீசார்ஜ் செய்து 46 மணிநேரம் பேசலாம்: இந்தியாவில் அறிமுகமாகும் Honor X7c 5G ஸ்மார்ட்போன்

ஓபிஎஸ்ஸை சந்தித்தேன்.. ஜெயலலிதா ஆட்சியை கொண்டு வருவோம்: சசிகலா

அடுத்த கட்டுரையில்
Show comments