Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பள்ளி மாணவியை கடத்திய ஆசிரியர்: பல்வேறு இடங்களுக்கு கொண்டு சென்று பலாத்காரம்!

பள்ளி மாணவியை கடத்திய ஆசிரியர்: பல்வேறு இடங்களுக்கு கொண்டு சென்று பலாத்காரம்!

பள்ளி மாணவியை கடத்திய ஆசிரியர்: பல்வேறு இடங்களுக்கு கொண்டு சென்று பலாத்காரம்!
, வெள்ளி, 16 செப்டம்பர் 2016 (11:44 IST)
ஏழாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி ஒருவரை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக தனியார் பள்ளி ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


 
 
பண்ருட்டியில் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணி புரிந்து வருகிறார் ராஜிவ் காந்தி என்பவர். இவர் அதே பகுதியை சேர்ந்த வேறொரு பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவியை கடத்தி சென்றுள்ளார்.
 
கடந்த ஜூன் மாதம் கடத்தி சென்ற அந்த மாணவியை பல்வேறு இடங்களுக்கு கொண்டு சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் ஆசிரியர் ராஜிவ் காந்தி. மாணவி காணாமல் சென்றதை அடுத்து அவரது பெற்றோர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் தலைமறைவான ஆசிரியரையும், கடத்தப்பட்ட மாணவியையும் தேடி வந்தனர்.
 
ஆசிரியரின் மொபைல் நம்பரை வைத்து அவரை பிடித்த காவல்துறை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சீமான் பேரணியில் தீக்குளித்த விக்னேஷ் உயிரிழப்பு