Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கனமழை எதிரொலி: இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரி விடுமுறை?

Siva
திங்கள், 2 டிசம்பர் 2024 (07:34 IST)
கனமழை மற்றும் புயல் சின்னம் காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகத்தில் உள்ள சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்றும் சில மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரி விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
 
தொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகமண்டலம், கோத்தகிரி, கூடலூர் தாலுகாக்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒரு நாள் விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை தாலுகாவில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் இடைவிடாமல் மழை பெய்து கொண்டிருக்கும் நிலையில், பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து தலைமை ஆசிரியர்களே முடிவு செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மழை பாதிப்பு குறித்த சூழ்நிலைக்கு ஏற்ப, அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் சற்று முன் தெரிவித்துள்ளது. 
 
ஏற்கனவே புதுவையில் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் இன்று விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சற்றுமுன் கிடைத்த தகவலின் படி, கள்ளக்குறிச்சியில் இன்று அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
அதேபோல், கடலூர் மாவட்டத்திலும் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், திருவண்ணாமலை, விழுப்புரம், கிருஷ்ணகிரி ஆகிய பகுதிகளிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வேலூர், சேலம், திருப்பத்தூர், தர்மபுரி, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பஞ்சாயத்தாயா இது? ட்ரம்ப்பை மதிக்காமல் ஈரான் - இஸ்ரேல் மீண்டும் போர்! - ட்ரம்ப் ரியாக்‌ஷன் என்ன?

வாங்கிய கடனை கொடுக்க முடியவில்லை.. நண்பனிடம் மனைவியை விற்ற கணவன்..!

400 கிலோ யுரேனியத்தை ஈரான் மறைத்து வைத்துள்ளது: அமெரிக்கா அதிர்ச்சி தகவல்..!

ஈரான் - இஸ்ரேல் போர் நிறுத்தம் நீட்டிக்க வாய்ப்பில்லை: ரஷ்ய அமைச்சர் கருத்து..!

நான் கடவுளை நம்பினேன்.. நீங்கள் டிஜிட்டலை நம்பினீர்கள்.. சுந்தர் பிச்சையுடன் படித்த துறவி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments