Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கனமழை எதிரொலி: இன்று பள்ளி, கல்லூரிகள் விடுமுறை குறித்த அறிவிப்பு!

Webdunia
திங்கள், 14 நவம்பர் 2022 (07:14 IST)
வடகிழக்கு பருவமழை மற்றும் வங்க கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
 
இந்த நிலையில் கனமழை காரணமாக தமிழகத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு கடந்த சில நாட்களாக விடுமுறை அளிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இன்று சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மழை இல்லை என்ற என்பதால் பல மாவட்டங்களில் இன்று பள்ளி கல்லூரிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இருப்பினும் காஞ்சிபுரம் மாவட்டத்தின் குன்றத்தூர் வட்டம் மாங்காடு உள்பட்ட பகுதிகளில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
அதேபோல் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு பகுதிகளை தவிர தமிழகத்தின் மற்ற அனைத்து பகுதிகளிலும் இன்று பள்ளி கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என்று கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments