Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சவுக்கு சங்கர் உடல்நிலை மோசமா? வழக்கறிஞர் கூறிய அதிர்ச்சி தகவல்..!

Siva
புதன், 10 ஜூலை 2024 (07:59 IST)
பெண் காவல்துறை அதிகாரிகளை சர்ச்சைக்குரிய வகையில் பேசியது உள்பட ஒரு சில வழக்குகளில் சிக்கிய சவுக்கு சங்கர் கடந்த சில மாதங்களாக சிறையில் இருக்கும் நிலையில் அவரது உடல்நிலை மோசம் அடைந்து இருப்பதாகவும் அவருக்கு தேவையான மருந்துகளை கொடுப்பதில்லை என்றும் அவரது வழக்கறிஞர் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புழல் சிறையில் சவுக்கு சங்கர் சித்திரவதை செய்யப்படுவதாகவும், அவர் சர்க்கரை நோயாளி என்று தெரிந்தும் அதற்கு தகுந்த மருந்துகள் கொடுப்பதில்லை என்றும், சவுக்கு சங்கர் வழக்கறிஞர் குற்றம் சாட்டியுள்ளார்.

சவுக்கு சங்கருக்கு சரியான ஆடைகள் கொடுப்பதில்லை என்றும், படிப்பதற்கு புத்தகம் கொடுப்பதில்லை என்றும், தேவையான மருந்துகள் கொடுப்பதில்லை என்றும், ஒவ்வொரு நாளும் பொய் வழக்கு போட்டு அவரை நீதிமன்றத்திற்கு அலைய விடுகிறார்கள் என்றும் சவுக்கு சங்கர் வெளியில் யாரிடமும் பேச அனுமதியும் கொடுப்பதில்லை என்றும் அடுக்கடுக்காக குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் அவரது உடல்நிலை மோசமாகி வருகிறது என்றும், அவர் சர்க்கரை நோயாளி என தெரிந்து அவருக்கு எந்தவிதமான சிகிச்சையும் அளிக்கப்படவில்லை என்றும் அவர் மிகவும் பலவீனமாக இருப்பதாகவும் மன அழுத்தத்தில் இருப்பதாகவும் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். அவரது இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Siva

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு! ஈபிஎஸ் காட்டம்..!

விஜய்க்கு நல்ல மனசு.. உதவி செய்யும் எண்ணம் இருக்கிறது: திருநாவுக்கரசர்

அதே 11A இருக்கையில் அமர்ந்ததால் நானும் உயிர் பிழைத்தேன்: பிரபல நடிகர்

மதுரை முருக பக்தர் மாநாட்டிற்கு உயர்நீதிமன்றம் பச்சைக்கொடி: ஆனால் சில நிபந்தனைகள்..!

தீவிரமடையும் தென்மேற்கு பருவமழை: தமிழகத்தின் 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..

அடுத்த கட்டுரையில்
Show comments