Webdunia - Bharat's app for daily news and videos

Install App

6 நாட்களில் ரூ.15 கோடி மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்! – சத்ய ப்ரதா சாகு தகவல்!

Webdunia
வெள்ளி, 5 மார்ச் 2021 (14:46 IST)
தமிழகத்தில் தேர்தல் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்த நாளிலிருந்து 15.20 கோடி ரூபாய் மதிப்புள்ள பணம், பரிசுபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழகம், கேரளா உள்ளிட்ட 5 மாநில சட்டமன்றங்களுக்கான தேர்தல் தேதி கடந்த பிப்ரவரி 26ம் தேதி மாலை அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது. தமிழகம் முழுவதும் தேர்தல் கட்டுப்பாடுகள் அமலில் உள்ளதால் கட்சி சின்னங்கள், கட்சி தலைவர் சிலைகள் மறைக்கப்பட்டு வருகின்றன. மேலும் கட்சி சம்பந்தமான போஸ்டர்கள் ஒட்டுதல், கட்சி சார்பில் பரிசு பொருட்கள் அளித்தல் ஆகிய செயல்கள் தடை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த 6 நாட்களாக தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட வாகன சோதனையில் ஆவணங்களின்றி பணம், பரிசுபொருட்கள் உள்ளிட்டவற்றை தேர்தல் பறக்கும் படை கைப்பற்றியுள்ளது. கடந்த 6 நாட்களில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் பரிசுப்பொருட்களின் மொத்த மதிப்பு 15.20 கோடி ரூபாய் என தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments