Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாத்தான்குளம் எஸ்.ஐ. பாலகிருஷ்ணன் தலைமறைவா? கைது செய்ய சிபிசிஐடி தீவிரம்

Webdunia
வியாழன், 2 ஜூலை 2020 (06:50 IST)
சாத்தான்குளம் எஸ்.ஐ. பாலகிருஷ்ணன் தலைமறைவா?
சாத்தான்குளம் செல்போன் கடை வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் லாக்கப் மரணம் குறித்த வழக்கு தற்போது விறுவிறுப்பு அடைந்துள்ளது. இந்த வழக்கு நேற்று முதல் சிபிசிஐடி வசம் வந்த பிறகு அதிரடியாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன 
 
இந்த நிலையில் நேற்று இரவு முதல்கட்டமாக எஸ்.ஐ. ரகுகணேஷ் கைது செய்யப்பட்ட நிலையில் அடுத்ததாக எஸ்.ஐ. பாலகிருஷ்ணன் என்பவரையும் கைது செய்ய சிபிசிஐடி போலீசார் முயற்சித்தனர். ஆனால் எஸ்.ஐ. பாலகிருஷ்ணன் தலைமறைவாக இருப்பதாகவும் அவரது மொபைல் போன் சுவிட்ச் ஆப் செய்து இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனை அடுத்து எஸ்.ஐ. பாலகிருஷ்ணனை கைது செய்ய சிபிசிஐடி போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது
 
மேலும் தந்தை மகன் மரணம் வழக்கில் எஸ்.ஐ. பாலகிருஷ்ணன், எஸ்.ஐ.  ரவி கணேஷ், காவலர்கள் முத்துராஜ், முருகன் உள்ளிட்ட 6 பேர் மீது சிபிசிஐடி போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது இதனையடுத்து 6 பேர்களும் இன்று இரவுக்குள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வாய்ப்பு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது
 
ஆனால் அதே நேரத்தில் சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் மீது இன்னும் வழக்குப்பதிவு செய்யவில்லை என்ற தகவலும் வெளிவந்துள்ளது. இருப்பினும் ஆதாரங்களின் அடிப்படையில் அவர் மீதும் விரைவில் வழக்கு பதிவு செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது 
 
சாத்தான்குளம் வழக்கு தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருப்பதால் நிலையில் சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கை விரைவில் முடித்து குற்றவாளிகள் அனைவரையும் நீதியின் முன் நிறுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9 வயது பள்ளி மாணவி மதிய உணவின்போது திடீர் மரணம்.. மாரடைப்பா?

இனி Unreserved பெட்டியில் 150 பேருக்கு மட்டுமே அனுமதி?? ரயில்வே அதிரடி முடிவு! - அதிர்ச்சியில் பயணிகள்!

ஆடம்பர கார், அடுக்குமாடி குடியிருப்பு, கிலோ கணக்கில் நகைகள்.. கோடிக்கணக்கில் டெபாசிட்.. எஞ்சினியருக்கு ரூ.250 கோடி சொத்தா?

கணவருடன் கள்ளத்தொடர்பு.. இளம்பெண்ணை மின்கம்பத்தில் கட்டி வைத்த உதைத்த மனைவி..

வெறும் 9 கிலோவில் ஒரு சக்கர நாற்காலி.. ஆட்டோவில் கூட எளிதில் கொண்டு செல்லலாம்.. சென்னை ஐஐடி சாதனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments