Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு: ஜாமீன் மனு தள்ளுபடி

Webdunia
வெள்ளி, 24 ஜூலை 2020 (11:32 IST)
தமிழகத்தை மட்டுமின்றி நாட்டையே உலுக்கிய சாத்தான்குளம் செல்போன் வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர்கள் காவல்துறையினர்களால் கொலை செய்யப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கை முதலில் சிபிசிஐடியும் தற்போது சிபிஐயும் விசாரணை செய்து வருகிறது.
 
இந்த நிலையில் இந்த வழக்கில் இதுவரை 10 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில் காவலர்கள் முத்துராஜ், தாமஸ் பிரான்ஸிஸ் ஆகியோர்களின் ஜாமீன் மனு சற்றுமுன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில்  காவலர்கள் முத்துராஜ், தாமஸ் பிரான்ஸிஸ் ஆகியோர்களின் ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரணை செய்தபோது, ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைத்து விடுவார்கள் என சிபிஐ தரப்பு வாதம் செய்தது
 
சிபிஐ தரப்பு வழக்கறிஞரின் வாதத்தை ஏற்று நீதிபதி காவலர்கள் முத்துராஜ், தாமஸ் பிரான்ஸிஸ் ஆகியோர்களின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்வதாக உத்தரவு பிறப்பித்தார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments