Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாத்தான்குளம் வழக்கு: கைதான இரு போலிஸ் கைதிகளுக்கு கொரோனா!

Webdunia
செவ்வாய், 28 ஜூலை 2020 (14:53 IST)
சாத்தான்குளம் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட காவலர்கள் முருகன், முத்துராஜா ஆகிய இருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 
சாத்தான்குளம் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 10 போலிஸ் கைதிகளும் மதுரை மத்திய சிறையில் உள்ள நிலையில் போலிஸ் கைதிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் காவலர்கள் முருகன், முத்துராஜா ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 
இருவரும் அரசு கொரோனா சிறப்பு சிகிச்சை மருத்துவமனைக்கு அழைத்து செல்லபட்டு சிகிச்சை அளிக்கவுள்ளனர். ஏற்கனவே இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட சார்பு ஆய்வாளர் பால்துரைக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சையில் உள்ளதோடு சாத்தான்குளம் கொலை வழக்கு விசாரணை குழுவில் இடம்பெற்றிருந்த 6 சிபிஐ அதிகாரிகளுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் வழக்கு தொடர்பாக சிபிஐ இன்று அறிக்கை தாக்கல் செய்யலாம் என ஏற்கனவே கூறியிருந்த நிலையில் அறிக்கை தாக்கல் செய்வது தாமதம் ஆகலாம் என தகவல் வெளியாகியது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments